இலங்கையில் மக்களை அச்சுறுத்தும் கடும் வெப்பம் : பரிதாபமாக ஒருவர் மரணம்
அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் வருகைத்தந்துள்ளார்.
எனினும் சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால் அவர் அக்குரஸ்ஸ நகரை நோக்கி மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றுள்ளார்.
இதன் போது உஷ்ணம் மற்றும் சோர்வு காரணமாக சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இதய நோயாளி
உயிரிழந்தவர் 72 வயதான வர்த்தகர் மற்றும் நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வர்த்தகரே இந்த நிலைக்குள்ளாகியுள்ளார்.
அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்கு 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனை செய்வதற்காக, சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பிரேத பரிசோதனை
மாத்தறை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், இதயத்தின் உயிரணுக்கள் குறைந்தமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலைக்கு முகங்கொடுக்கும் நோயாளர்கள் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதன் மூலம் இவ்வாறான திடீர் மரணங்களை குறைக்க முடியும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri