ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
இலங்கை மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வரும் ஐஸ் போதை பொருளை பயன்படுத்துபவர்கள் பக்கவாதம் அல்லது மாரடைப்பு மற்றும் இதயம் நோய்களுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் இந்த நிலைமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படும் என அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலின மருத்துவ சேவை பிரிவின் வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த ஐஸ் போதைப்பொருள் ஊக்கமருந்து வகையைச் சேர்ந்தது எனவும், அதனால் அதிகப்படியான பாவனைக்கு அடிமையாவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, போதைப்பொருள் பாவனை செய்பவர்கள் மிகக்குறுகிய காலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என வைத்தியர் ஹேமா வீரகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மிகக் குறைந்த அளவு மருந்தைப் பயன்படுத்தினாலும், அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், ஒரு முறை பயன்படுத்தினாலும், பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐஸ் மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, நபர் எதிர்பார்ப்பதை விடவும் அதிகமாக, உடல் அரிப்பு, வறண்ட வாய், அதிக வியர்வை, விரைவான இதயத் துடிப்பு மற்றும் விரைவான சுவாசம் மற்றும் பசியின்மை ஏற்படலாம்.
மேலும் ஐஸ் அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் பக்கவாதம் அல்லது மாரடைப்புக்கு ஆளாகலாம், மயக்கமடைந்து அல்லது இறக்கலாம். இந்த மருந்துகளின் மனநல சிக்கல்கள் மிகவும் பொதுவானவை. என்ன செய்வது என்று புரிந்து கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam