இலங்கை அணி மீண்டுமொருமுறை வெற்றியீட்டியது
நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலக்கிண்ண தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.
9 விக்கட்டுக்களால் அயர்லாந்து அணியை தோற்கடித்து இலங்கை வெற்றியீட்டியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.