15 வயதிற்குப்பட்டவர்களுக்கு HIV தொற்று ஏற்படுவதை தடுத்த நாடாக இலங்கை
15 வயதிற்குப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதைத் தடுத்த நாடாக இலங்கை சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ.ராகுலன் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி தினம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருடாவருடம் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனுடைய நோக்கம் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை எல்லோர் மட்டத்திலும் ஏற்படுத்துவதும், சிகிச்சை பெறுவது தொடர்பான முன்னேற்றங்களை வருடா வருடம் வெளியிடுவதும் ஆகும்.
வவுனியா மாவட்டத்தின் எயிட்ஸ் நோய்த் தடுப்பு செயற்திட்டமானது சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. உலகளாவிய ரீதியில் இது வரையில் 38 மில்லியன் எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 1.7 மில்லியன் நோயாளர்கள் 15 வயதுக்குக் குறைந்தவர்கள். இந்த அடிப்படையில், குழந்தைக்குத் தொற்று ஏற்படுவதைத் தடுத்த ஒரு நாடாக 2019 ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
2017 இற்கு பிற்பாடு எந்த விதத்திலும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அதனை அடிப்படையாகக் கொண்டு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை ஆராய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக வவுனியா மாவட்டமும் காணப்படுகின்றது.
வவுனியா மாவட்டம் எயிட்ஸ் நோயைக்
கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளைக் கடுமையாக முன்னெடுத்து வருகின்றது. மக்கள்
இந்த நோய் தொடர்பான சரியான புரிதலுடன் செயற்பட வேண்டும். அதன் மூலம் இந்த நோயை
நாம் முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனத்
தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022