இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தும் ஒற்றை எழுத்து! ஜோதிடர் தெரிவித்த தகவலால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
ஸ்ரீலங்கா என்ற பெயரிலுள்ள ஸ்ரீ என்ற வார்த்தையே பேரழிவு விளைவை ஏற்படுத்தியதாக விஞ்ஞான எழுத்தாளரும், வானியலாளருமான அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
'சிலோன்' என்பதிலிருந்து 'ஸ்ரீலங்கா' என பெயர் மாற்றம் பெற்றது முதல் ஸ்ரீ என்ற துரதிஷ்டமான சொல்லின் காரணமாகவே, கடந்த தசாப்தங்களாக நாடு முற்றிலும் அழிவை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலையிலிருந்து, வங்குரோத்தான நிறுவனங்கள் வரை, ஸ்ரீ என்ற எழுத்து அல்லது வார்த்தை ஒரு பேரழிவு விளைவை ஏற்படுத்தியது.
நாட்டின் வங்குரோத்து நிலை
இலங்கையின் கடைசி மன்னன் கூட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் என்று அழைக்கப்பட்டான். நாடு, தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பெயர்களுக்கு முன்னால் ஸ்ரீ என்ற சொல்லை பயன்படுத்துவது நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமாகியுள்ளது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்ததன் மூலம் 1956ஆம் ஆண்டு முதல் எமது நாடு துரதிஷ்டத்தை பெற்றிருந்தது. அவர் வாகன இலக்கத் தகடுகளில் ஸ்ரீ என்ற சொல் அல்லது எழுத்தை சேர்த்ததன் பின்னர் நாட்டில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தினார்.
இந்த மோதலின் போது, நாடு பெருமளவிலான உயிர் இழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை சந்தித்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பின்னர் பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா ஷிப்பிங் கம்பெனி லிமிடெட், ஸ்ரீலங்கா ரயில்வே (SLRD), மத்திய வங்கி மற்றும் போக்குவரத்து சபை (SLTB) போன்ற பல அரச நிறுவனங்கள் ஸ்ரீ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால் அவை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா என்று பெயரிடப்படுவதற்கு முன்னர் எமது நாடு லங்கா, சிங்களே, தம்பபன்னி, செரண்டிப், தப்ரபேன், சைலான், சிலோன், ஹெலதிவ, தஹம் திவயின, அல்லது லக்பிம என அழைக்கப்பட்டது. ஸ்ரீ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
இந்த வார்த்தையின் வீரியத்தை நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி
பிரித்தானிய டொமினியன் அந்தஸ்தை நீக்கி, 1972இல் புதிய அரசியலமைப்புடன் குடியரசாக மாறிய பின், இலங்கை தனது அரசியல் மற்றும் பொருளாதாரத்தை விஸ்தரிக்க ஆரம்பித்ததாக நம்பும் இலங்கையர்களின் குழு மத்தியில் ஒரு கருத்து உள்ளது. அது நாட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியது.

90களின் முற்பகுதியில், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆங்கில Sri என்பதற்கு பதிலாக Shri என்று மாற்றி இதை சரிசெய்ய முயன்றார். ஏனென்றால், ஜனாதிபதி பிரேமதாஸவிடம் இந்த பெயர் ஜனாதிபதிக்கு துரதிஷ்டம் என்று ஒரு ஜோதிடர் கூறியதாக கூறப்படுகிறது.
எனவே அவர் நாட்டின் உத்தியோகபூர்வ பெயரை "Sri Lanka என்பதில் இருந்து "Shri Lanka" என்று அரசியலமைப்பு அதிகாரம் இல்லாமல் மாற்றினார். மாற்றப்பட்ட எழுத்துப்பிழையை ஒரு நினைவு நாணயத்தில் மட்டுமே காணலாம்.
1993 மே முதலாம் திகதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னர் விரைவில் எழுத்துப்பிழை மாற்றப்பட்டது. ஜூன் 1992 மற்றும் டிசம்பர் 1993 க்கு இடையில் வெளியிடப்பட்ட முத்திரைகளில் மட்டுமே Shri என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு அறிக்கை கூறுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri