கனடாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! - இலங்கை அரசு கடும் எதிர்ப்பு
கனடாவின் ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் ஒரு இனப்படுகொலை என்பதை ஏகமனதாக அங்கீகரித்த நகர்வுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட அறிவியற் கிழமைக்கான சட்டமூலம் கடந்த வாரம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் பேரவலவத்தின் 12ம் ஆண்டு நினைவு அடுத்தவாரம் நினைவுகூரப்படவுள்ள நிலையில் கடந்தவாரம் ஒன்ராறியோ மாகாண சட்ட மன்றம் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம் சட்டத்தை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது.
தமிழின அழிப்பு இலங்கையில் நடைபெற்றுள்ளதென்பதை அங்கீகரித்து அதனை சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதலாவது வரலாற்று நிகழ்வாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை தனது பணியகத்துக்கு அழைத்து இந்தவிடயம் தொடர்பான கண்டனத்தை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்.....
2009 தமிழின அழிப்பு தொடர்பாக கனடா ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் தீர்மானம்