கப்பல் தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும்! டக்ளஸ்
கொழும்பு கடற்பரப்பில் வைத்து தீப்பற்றிக்கொண்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து இரண்டு வாரங்களுக்குள் ஆரம்ப இழப்பீட்டு நிதியை இலங்கை பெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஏற்கனவே இடைக்கால இழப்பீடு கோரியுள்ளது. இரண்டு வாரங்களில் அந்த நிதி கிடைக்கும்.இந்த நிதியைப் பெற்றவுடன், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடலில் கப்பல் தீப்பரவலுக்குள்ளானமையினால் மீன்கள் மாசுபட்டதால் அவற்றை உட்கொள்ள முடியாமை தொடர்பில் எழுப்பப்பட்ட கூற்றை அமைச்சர் மறுத்துள்ளதுடன், மக்களைப் பயமுறுத்துவதற்காக ஒரு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.