வேலுகுமார் எம்.பி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் கட்சியின் கொள்கைகளை மீறினார் என்று தெரிவித்து கண்டி எம்பி வேலுகுமார் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை
“அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி எம்பி வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
| பட்ஜட் வாக்கெடுப்பில் வேலுகுமார் நடுநிலை! - காரணத்தையும் வெளியிட்டடார் |
May you like this Video
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam