நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும்: கைதி ஒருவரின் பரபரப்பு தகவல் - நீதி அமைச்சர் விளக்கம்

Sri Lanka Bomb Blast 2019 Sri Lanka Easter bombings Sri Lanka Parliament Dr Wijeyadasa Rajapakshe
By Benat Oct 19, 2023 08:46 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைப் போன்று நாடாளுமன்றத்தில், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படப் போவதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு தரப்பினரே வெளிப்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பெண்களுடன் பழகுவதற்காக கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம்

பெண்களுடன் பழகுவதற்காக கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கைதியின் கடிதம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. இன்றும் அதன் தாக்கம் தொடர்கிறது. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு இணையான பிறிதொரு குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

 ஆகவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வெளியாகும் செய்திகள் மற்றும் கருத்துக்களை அலட்சியப்படுத்த முடியாது.

நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும்: கைதி ஒருவரின் பரபரப்பு தகவல் - நீதி அமைச்சர் விளக்கம் | Sri Lanka Bomb Blast

கண்டி கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோகதர் ஒவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி தென்னக்கும்புர பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இருந்துள்ளார்.

 இதன்போது பல்லேகல சிறைச்சாலையில் இருந்து கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலைக்குரிய பேருந்து சோதனை சாவடிக்கு அருகில் சென்ற போது அந்த பேருந்தில் இருந்த கைதி ஒருவர் ஒரு கடிதத்தை இந்த உப பொலிஸ் பரிசோதகரிடம் கொடுத்து அந்த கடிதத்தை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு அனுப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

 இதனைத் தொடர்ந்து அந்த உப பொலிஸ் பரிசோதகர் தொலைபேசியில் என்னை தொடர்புக் கொண்டு இவ்விடயத்தை கூறினார்.

 அப்போது அந்த கடிதத்தை தபாலில் அனுப்பி வைப்பதற்கு முன்னர் வடசப் ஊடாக முதலில் அனுப்பி வைக்குமாறு நான் கூறினேன். அதற்கு அமைய அந்த கடிதம் எனக்கு கிடைத்தது. தற்போது கைவசம் உள்ளது. 

 அந்தக் ககைதியின் கடிதத்தில் பல்லேகல சிறைச்சாலையில் தன்னுடன் சிறைக்கூடத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 5 கைதிகள் உள்ளார்கள். 

நாளை கடையடைப்பு போராட்டம்: வடக்கில் பாடசாலைகள் திறக்கப்படுமா..!

நாளை கடையடைப்பு போராட்டம்: வடக்கில் பாடசாலைகள் திறக்கப்படுமா..!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைப் போன்று இன்னொரு குண்டுத் தாக்குதல் நடத்துவது குறித்து பேசிக் கெளா்கின்றார்கள்.

 அவர்கள் நாடாளுமன்றம், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் பெயர் குறிப்பிட்டு பேசினர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மூலம் எமக்கு கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் இந்த விடயத்தை அலட்சியப்படுத்த முடியாது. 

ஆகவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரச புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தினேன். 

கைதியின் இக்கடிதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கடிதம் எழுதிய சிறைக் கைதிக்கும் அந்த கைதி குறிப்பிட்ட ஏனைய ஐந்து கைதிகளுக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 

 ஆகவே அவர்களை பழிவாங்குவதற்கு இவ்வாறு  குறிப்பிட்டாரா அல்லது உண்மையில் அவ்வாறு இடம்பெற்றதா என்பதை தொடர்நது ஆராய்வதாக எனக்கு அறிவித்துள்ளார்.

சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம்: அம்பிட்டிய தேரர் கடும் கண்டனம் (Video)

சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம்: அம்பிட்டிய தேரர் கடும் கண்டனம் (Video)

அத்துடன் இந்த சந்தேகநபர் கடந்த ஒரு சில தினங்களுக்க முன்னர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு சில விடயங்களை கூறியுள்ளார். 

இதனை சட்டத்தரணிகள் எனக்கு அறிவித்துள்ளார்கள். இந்த நபர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த நீதிபதி இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

எனவே நாட்டில் மீண்டும் மீண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை போன்ற தாக்குதல்களை மேற்கொள்ள திட்டம் உள்ளதா? உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைப் போன்று நாடாளுமன்றம், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட போவதாக வெளியான செய்திகள் உண்மையானதா என்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரே உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US