இலங்கை மக்களுக்கு பெரும் சிக்கல் - தடுப்பூசி போடாதவர்கள் பேருந்தில் பயணிக்க தடை?
இலங்கையில் கொவிட் தடுப்பூசி போடாதவர்கள் பொது போக்குவரத்தில் பயணிப்பதில் சிக்கல் நிலை வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் மாத்திரம் பேருந்துகளில் பயணிக்க கூடிய முறை ஒன்றை தயார் செய்யுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகள் பயணிக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தடுப்பூசிகள் இரண்டை பெற்றுக் கொண்டுள்ள நபர்கள் பேருந்துகளில் பயணிப்பதற்கு முன்னிரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக் கொண்ட நபர்களுக்கு பணம் செலுத்தி விரைவில் தற்காலிக அடையாள அட்டை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அடையாள அட்டைகளை சுகாதார பிரிவு அதிகாரிகளின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் மிகவும் நல்லதென அவர் கூறியுள்ளார்.
அடையாள அட்டைகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியு்ளளார்.
இதன்போது பயணக்கட்டுப்பாடு இருக்கும் போது அத்தியாவசிய சேவைகள் என்பது பிரச்சினை அல்ல. தடுப்பூசி அடையாள அட்டைகளை காண்பிக்கும் நபர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan