போராட்டக்களத்தில் பொலிஸார் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஹிருனிக்கா (Video)
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பில் பாரிய போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரமசந்திரவும் பங்குப்பற்றிருந்தார்.
ஹிருனிக்கா
போராட்டத்தின் போது ஹிருனிக்கா பொலிஸ் அதிகாரிகளுடன் கடும் கோபத்தில் முரண்பட்ட சம்பவங்களும் இதன்போது பதிவாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.
தொடரும் பதற்றம்
இப் போராட்டம் தற்போது பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பொலிஸாரும், கலகத்தடுப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் பொலிஸ் தடையை மீறி முன்னேற முயற்சித்து வரும் போதும் பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் இணைந்து அந்த முயற்சிகளை முறியடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரரர்கள் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
கொழும்பில் படையினருடன் மக்கள் தள்ளுமுள்ளு! தொடர்ந்தும் பதற்றம் (Live) |




இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
