பலப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு! கொழும்பில் தங்காலை நோக்கி படையெடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் (Video)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்ஒன்றியமும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களும் இணைந்து தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தற்போது இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தங்காலை சிறைச்சாலைக்கு பேரணி
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்காலை சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் பேரணியாக செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் போராட்டதில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்ஒன்றிய பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் ஏனைய செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
