வலுவான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள இலங்கை மற்றும் ரஷ்யா
இலங்கையும் ரஷ்யாவும் தங்களது வலுவான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மொஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இரண்டு நாடுகளும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.
இலங்கை மற்றும் ரஷ்யக் கூட்டமைப்புக்கு இடையிலான 10வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மொஸ்கோவில் உள்ள ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றன.
இந்த ஆலோசனைக்கு இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தூதர் இகோர் மோர்குலோவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ரஷ்யா இடையே அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார துறைகள் தொடர்பில் பேசப்பட்டன.
ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே, இலங்கையில் ரஷ்யாவின் தூதர் யூரி பி.மடேரி, இலங்கை மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டனர்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
