சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்கத் தயார்: வெல்கம மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க
சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் தமது நிபந்தனைகள் அடிப்படையில் அரசாங்கமொன்று நிறுவப்பட்டால் அதில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கமொன்றில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல் |