முல்லைத்தீவில் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடை : நடந்தது என்ன..!
முல்லைத்தீவு கொத்தி காமத்தில் உள்ள பாதையின் மீது ஊற்று நீர் ஓடிக் கொண்டிருப்பதால் மக்களுக்கு அசௌகரியமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்களுடைய காணிகளில் இருந்து ஊறி வரும் ஊற்று நீர் வீதியின் ஓரமாக உள்ள வடிகால்களினூடாக செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
வடிகால்கள் தூர்ந்துள்ள நிலையில் அதனை இதுவரை மீள் துப்பரவு செய்து கொள்ளாததால் ஊற்று நீர் வீதியின் மீது ஓடிச் செல்கின்றது.
100 மீற்றர் நீளப் பாதையில் பயணம்
கொத்தி காமத்தில் பாதையின் 100 மீற்றர் நீளம் கொண்ட பகுதி வழியே பயணம் செய்யும் போது தண்ணீரும் சகதியுமாக இருக்கும் பகுதிகளையும் கடந்து செல்ல நேரிடுகின்றது.
இருப்பினும் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் கிராம சேவகரும் கிராம மக்களும் இது தொடர்பில் கண்டுகொள்ளாது இருப்பதாக அறிய முடிகின்றது.
மாரி மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் இந்த வீதி சேதமாகியிருந்துள்ளது.
எனினும் வீதியின் பராமரிப்பில் பொது மக்கள் அக்கறையற்று இருக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமந்துகின்றனர்.
இந்த வீதி தண்ணீரூற்று குமுழமுனை வீதியுடன் முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியை இணைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 23 மணி நேரம் முன்

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan
