ஆளும் கட்சியின் பின்வரிசைக்குள் பிளவு
ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தற்போது தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதற்கு இந்த பிளவே காரணம் எனக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த தினங்களில், தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தனித்தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தனர்.
அரசாங்கத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவரது தேவைக்கு அமைய இந்த செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கு அமையவே சுசில் பிரேமஜயந்த ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி கூறியமைக்கு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam