தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு
மட்டக்களப்பு - முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட பூசையின் போது சிறையிலுள்ள அரசியற்கைதிகளின் விரைவான விடுதலைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் அணி தலைவர் லோ.திபாகரன், போரதீவுபற்று பிரதேச சபை முனைத்தீவு வட்டார உறுப்பினர் கரன், மகளீர் அணி மட்டக்களப்பு உறுப்பினர் திருமதி.க.ரஞ்சினி மற்றும் வாலிபர் அணி உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர்.



டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam