கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்!
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் ஒத்திகை நிகழ்வுகளுக்கான போக்குவரத்து திட்டம் ஒன்றை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை (29) முதல் பிப்ரவரி 3ம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும்.
அதேபோல், தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி 4ம் திகதி காலை 6 மணி முதல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி, மேற்படி நேரங்களில் கொழும்பை அண்மித்துள்ள குறிப்பிடப்பட்டுள்ள வீதிகளில் போக்குவரத்து அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.