அவுஸ்திரேலிய சென்ற மனைவி, பிள்ளைகள் : இலங்கையில் கணவனின் மோசமான செயல்
தென்னிலங்கையில் குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு மதுபான தொழிலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்து தனது வீட்டில் பாரியளவில் மதுபான ஆலையை நடத்தியவரை காலி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வடிகட்டப்பட்ட மதுபானம் மற்றும் அதனை வடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மதுபான ஆலை
காலி, போபே சபுமல் பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் இந்த பாரிய மதுபான ஆலை நீண்டகாலமாக இயங்கி வருகின்றது.
இச்சோதனையின் போது மதுபான ஆலையில் இருந்து 8.25,000 லிட்டர் கோடா, 66500 லிட்டர் காய்ச்சிய காசிப்பு, 2 இரும்பு பீப்பாய்கள், 8 பிளாஸ்டிக் பீப்பாய்கள், 2 எரிவாயு அடுப்புகள், 2 எரிவாயு சிலிண்டர்கள், 3 செப்பு சுருள்கள் மற்றும் 2 இரும்புச் சுருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரதான சந்தேக நபருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், வழக்குப் பொருட்களும் காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
