இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் காரணமாக சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெறும் போட்டிகளின் திகதிகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து திட்டம்
அதன்படி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடிய சாலைகள் குறித்து பொலிஸார் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பிரதீபா மாவத்தை, சத்தர்மா மாவத்தை, ஜெயந்த வீரசேகர மாவத்தை, பெத்தாராம மாவத்தை, 100 அடி சாலை, போதிராஜா மாவத்தை, வின்சென்ட் பெரேரா மாவத்தை மற்றும் பிரிட்டோ பாபபுல்லே சாலை ஆகியவை இந்த சாலைகளாகும்.

ஜனவரி 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இந்த போக்குவரத்து திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் திகதிகளில் சம்பந்தப்பட்ட சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மதியம் 12.00 மணி முதல் போட்டிகள் முடியும் வரை அந்த சாலைகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சாலைகள் மூடப்படாது அல்லது கட்டுப்படுத்தப்படாது என்றும், சாதாரண போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் கொழும்பு போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri