இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விசேட வரி! வெளியானது வர்த்தமானி அறிவித்தல்
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 10 ரூபா விசேட வரி விதிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கடந்த 3ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.
சோளத்திற்கான 10 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து ஒரு ரூபாவை மாத்திரம் அறவிடவுள்ளதுடன், எஞ்சிய தொகை திரிபோஷ உற்பத்திக்காக ஸ்ரீ லங்கா திரிபோஷ லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, சிறப்பு வணிக வரி செப்டம்பர் 4, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.