வாக்களிப்பின் நடைமுறைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் விசேட செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் இன்று (23.08.2024) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் தேர்தல் அலுவலகத்தினால் விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் மாவட்ட தேர்தல் அலுவலக பிரதி ஆணையாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தபால் மூல வாக்களிப்பின் போது அத்தாட்சி படுத்தும் அதிகாரிகளுக்கான பொறுப்புகளும் அவர்களது கடமைகளும் சம்பந்தமாக ஏற்படும் சட்டரீதியான சிக்கல்கள் போக்குவரத்து பாதுகாப்புவிதிமுறைகள் பற்றியும் இங்கு கலந்து கொண்டவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விசேட கவனம்
மேலும், இதன் போது முதன்முறையாக பணியாற்றவிருக்கும் அதிகாரிகளுக்கு விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கான அறிவுரைகளும் இங்கு வழங்கப்பட்டன.
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்காளரை அத்தாட்சி படுத்தல் வாக்காளர்களுக்கு
தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் வாக்களிப்பின் இறுதியில் வாக்கச்சீட்டுகளை
பாதுகாப்பாக தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்தல் சம்பந்தமாகவும் தேர்தல்
கடமையில் ஈடுபடவுள்ள அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு இங்கு
அறிவுறுத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.