கிளிநொச்சியில் அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விசேட செயலமர்வு
கிளிநொச்சியில் சிங்கள மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விசேட செயலமர்வு நடைபெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு, நேற்று (20-08-2024) கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலிற்கான தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.
தெளிவான அறிவூட்டல்கள்
இதற்கமைய, கிளிநொச்சியில் தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் சிங்கள மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு குறித்த அறிவூட்டல் தொடர்பான விசேட செயலமர்வு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பொலன்னறுவை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் என். பி. பி. ஐ. ஆர். குணரத்ன வளவாளராகக் கலந்துகொண்டு இத்தேர்தலுக்கான செயன்முறைகள் தொடர்பில் தெளிவான அறிவூட்டல்களை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ. அமல்ராஜ்,
பொலிஸ் மற்றும் முப்படையினர், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |