கொழும்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
மலரவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் இன்று விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு உதயமாகவுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்குமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களைப் போன்று விபத்துக்களையும் தடுப்பது முக்கியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு - வருட ஆரம்பத்திலேயே இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு - வருட ஆரம்பத்திலேயே இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |