தேர்தலுக்கு பின்னரும் ஒரு வாரத்துக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளை தடுக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு வார காலத்திற்கு பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை இயக்கப்போகும் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் தொடர்பான பணிகள்
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முன்னைய மற்றும் பின்னரான காலப்பகுதிகளை உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் தொடர்பான பணிகளுக்காக சுமார் 65,000 பொலிஸார் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கிளீன் தையிட்டி..! 1 நாள் முன்

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan

அட்டகாசமாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் வளைகாப்பு... நேரில் சென்ற நடிகர்கள் Cineulagam

உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள் News Lankasri

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால்..எங்கே சென்றுள்ளார் பாருங்க, போட்டோஸ் Cineulagam
