நாட்டில் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு விடுமுறை
மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சிக்கு விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படுவதால் அதற்கு பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையை நாடாத்துமாறும் மற்றும் இது சம்பந்தமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam