கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!
நாளைய தினம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் பெற்றோரின் மகிழ்ச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் மகிழ்ச்சியும் ஆகும் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் தலையிட்டு ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நம்பகமான தீர்வை முன்வைத்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, நாளை முதல் பல கட்டங்களாக பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுகின்றன. இதன்படி, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் தொடங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri