“தீரன்” திரைப்பட பாணியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்
தமிழகம் அரக்கோணம் அருகே ’தீரன்’ படப் பாணியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 12மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றில் ஆயுதங்களுடன் பிரவேசித்த குழுவினர், வீட்டில் இருந்து நான்கு பேரை வாளால் வெட்டியதுடன், துப்பாக்கி சூட்டையும் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்
“தீரன்” பட பாணியில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை கைதுசெய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன..
இதேவேளை இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழக பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri