“தீரன்” திரைப்பட பாணியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்
தமிழகம் அரக்கோணம் அருகே ’தீரன்’ படப் பாணியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 12மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றில் ஆயுதங்களுடன் பிரவேசித்த குழுவினர், வீட்டில் இருந்து நான்கு பேரை வாளால் வெட்டியதுடன், துப்பாக்கி சூட்டையும் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டின் பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்
“தீரன்” பட பாணியில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை கைதுசெய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன..
இதேவேளை இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழக பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam