இந்திய வம்சாவளி வீரரொருவருக்கு அமெரிக்க விமானப்படை வழங்கியுள்ள சிறப்பு அனுமதி
இந்திய வம்சாவளி வீரரொருவருக்கு அமெரிக்க விமானப்படை சிறப்பு அனுமதியொன்றினை வழங்கியுள்ளது.
இதற்கமைய,அமெரிக்க விமானப்படையில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவருக்கு முதல் முறையாக பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமானப்படை அனுமதியளித்துள்ளது.
" நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய அடையாளங்களில் ஒன்றான சீருடையுடன் திலகத்தையும் அணிகிறேன். இதை அணிவதை சிறப்பாக உணர்கின்றேன். வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்ல இது எனக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது. சீருடையில் இருக்கும் போதும் மத சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ள நாட்டில் நான் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன் " என தர்ஷன் ஷா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மத சுதந்திரத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri