விரிவான கூட்டு நடவடிக்கை: வாகன மோசடிகளை கண்டறிய களமிங்கும் பொலிஸார்!
கடந்த அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் மற்றும் அரசு தொடர்பான உயரதிகாரிகள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களைக் கண்டறிய விரிவான கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ், சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் கீழ் குறித்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறான வாகனங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுங்க வரி மோசடி
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக ஒருங்கமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும், சட்டவிரோத உதிரிபாக இறக்குமதி போன்றவற்றை கண்டறிய இதன்முலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னாள் உயரதிகாரிகளின் வசம் இன்னும் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பல முறைபாடுகள்
வாகனங்களை ஒப்படைக்காமல் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து விட்டு சென்றமை தொடர்பிலும் பல முறைபாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை நிராகரிக்கப் போவதில்லை எனவும், அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் மறைத்தல் தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri