மலையக தொடருந்து சேவைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இரவு நேர மலையக தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர சிறப்பு தொடருந்துகள் இன்று (26.05.2024) மூன்றாவது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு
ஏனைய தொடருந்துகள் இன்று(26.05.2024) இயங்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்தோடு இன்று கணேவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தில் வலக்கும்புர பகுதியில் வைத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 4 தொடருந்து சேவைகள் தாமதமடையக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
