வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்கள் அல்லது மாற்றுத்திறனாளியான வாக்காளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் சென்று வாக்களிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு போக்குவரத்து வசதிக்கான விண்ணப்பம்
மாற்றுத்திறனாளி என்பதனால் நடந்து அல்லது பொது போக்குவரத்து மூலம் வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாவிட்டால், சிறப்பு போக்குவரத்து வசதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல் ஆணைக்கும் வெளியிட்டுள்ளது.