யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம்
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விசேட கூட்டமொன்று யாழில் இன்று(26.08.2024) நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போட்டியிடுகின்ற நிலையில் அவரை ஆதரித்து முன்னெடுக்கப்பட உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், தென்னிலங்கை
ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து வருகின்ற அழைப்புகள் தொடர்பாக என்ன
முடிவெடுப்பது என்றும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார கூட்டங்கள்
மேலும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார கூட்டங்கள் தொடர்பில் தமிழ் தேசிய பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் பொதுச் சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri