ஜனாதிபதிக்கும் இந்திய ஹோட்டல்ஸ் நிறுவன தலைவருக்கும் இடையே விசேட சந்திப்பு
இந்தியன் ஹோட்டல்ஸ் (Indian Hotels) கம்பனி லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான புனித் சத்வால் (Puneet Chhatwal) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் தமது நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பில் அவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கருத்துப்பகிர்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஃபோர்ப்ஸ் பட்டியலிடப்பட்ட நேபாளத்தின் கோடீஸ்வரர் பினோத் சௌத்ரி, சிஜி கோர்ப் குளோபல் மற்றும் சிஜி ஹொஸ்பிடாலிட்டி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சவுத்ரி மற்றும் இலங்கையின் முதலீட்டு சபை தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri