அமெரிக்கத் தூதுவருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி.க்கள் விசேட சந்திப்பு!
இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி.க்களுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான, குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க, தமிழ் தரப்புகள் சர்வதேச அரசாங்கங்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
இதன்படி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தீர்மானங்களும், அவை தொடர்பான நடவடிக்கைகளும், அறிக்கையிடல்களும் இலங்கைத் தீவில் இடம்பெற்ற சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
எனினும், இலங்கை மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை மேற்கொண்டு வந்துள்ள போதிலும், பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறி வரும் அரச தரப்பினர் அவ்வப்போது வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை மீளப்பெற்றுள்ள அரசியல் விருப்பற்ற கண்துடைப்பு நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று இடம்பெற்றுள்ள அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருடான ஞானமுத்து ஸ்ரீநேசன், கருத்து தெரிவிக்ககையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
