ரணிலிற்கும், மைத்திரிக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுதல் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளல் என்பன குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்றைய தினம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவு வழங்கும் என்பது குறித்து இன்றைய தினம் பிரதமருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri