வாகனங்களில் முகக்கவசம் அணியாது செல்பவர்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை
வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் பயணித்த 8,394 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் தொடர்பில் நேற்று 778 போக்குவரத்து பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது முறையாக முகக்கவசம் அணியாத 2,363 பேருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முகக்கவசம் அணியாமல் பயணிக்கின்றமையால் இலகுவாக தொற்றுக்குள்ளாகக் கூடும்.
எனவே முகக்கவசம் அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |