அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்
பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம், பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவர் இலங்கையுடனான தனது நாட்டின் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.
இருதரப்பு உறவு
சந்திப்பின் ஒரு பகுதியாக, உயர்ஸ்தானிகர் அஜீஸ், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் வாழ்த்துக் கடிதத்தை இலங்கை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை பாகிஸ்தானிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் இலங்கையுடனான அதன் நெருங்கிய உறவுகளை ஆழமாக மதிக்கிறது. அத்துடன், இரண்டு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நெருக்கமாக பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஜனாதிபதி சர்தாரி கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan