சட்டவிரோத மருந்து இறக்குமதி தொடர்பில் சிறப்பு விசாரணை
அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் மருந்து பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக பரிசீலிக்க சட்டமா அதிபரால் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மருந்து பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் மஹேன் வீரமன், அமலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம்
இருப்பினும், சம்பந்தப்பட்ட குழுவில் உள்ள மஹேன் வீரமன் செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிபதி மஹேன் வீரமன் பதவி விலகவுள்ளமை குறித்து தலைமை நீதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri