பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
சினோஃபார்ம் கோவிட் தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி, பூஸ்டராக அதாவது மூன்றாம் தடுப்பூசியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவு கிடைத்த 6 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் அளவு வழங்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தினால் ஃபைசர் பூஸ்டர் அளவைப் பெறுவது தாமதமாகும்.
எனவே மாணவர்கள் அருகிலுள்ள பல்கலைக்கழகத்தின் மூலம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
