ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பு
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மதிப்பீட்டின் பின்னர் பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை
இந்த குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய, வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், அச்சுறுத்தலுக்கு உள்ளான வேட்பாளர்களின் வீடுகளுக்கும், அவர்கள் நடமாடும் போது அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
