கிளிநொச்சியில் மின் தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நாளுக்கு நாள் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின் தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மயானத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு கோடி ரூபாவை கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார். புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்திய கலாநிதி மு.சிறீதர், அதிபர்கள் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மின்மயானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தலைவராகக் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜா, செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தன், பொருளாளராக அதிபர் விக்கினராஜா, உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேல், உபசெயலாளராக ரவி, உறுப்பினர்களாக வைத்திய கலாநிதி மு. சிறீதர் கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
