கருணாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே விசேட கலந்துரையாடல்
கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (17.07.2024) மாலை 3 மணியளவில் சிறிகோத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
முக்கிய கலந்துரையாடல்
ஐ.தே.கட்சியின் நிர்வாக குழுவின் அழைப்பினை ஏற்று, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைபீடம் கருணா அம்மான் தலைமையில், உப தலைவர் ஜெயா சரவணா மற்றும் செயலாளர் செந்தூரன் ஆகிய குழுவினர், ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சரான அகிலவிராஜ் காரியவம்சமுடன் இணைந்து இந்த முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டிந்தனர்.
இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாகவும், சிறப்பான முடிவுகளுடன் ஆராயப்பட்டு பேசப்பட்டதாக தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
