நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விசேட அறிவிப்பு
விலைக்கழிவுடன் அப்பியாசக் கொப்பிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அச்சக கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளுக்கு 30 வீத விலைக்கழிவு வழங்கப்படுவதாக தேசிய அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடிதத்துடன் வந்தால் கழிவு
குறித்த விலைக்கழிவில் அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக் கொள்ள பாடசாலை அதிபரின் கடிதத்துடன் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனம் அல்லது அதனது விற்பனைக் கிளைகளுக்கு வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
அந்த வகையில், பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
