இலங்கையின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திரக் குழு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திரக் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்தத் தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
விசேட இராஜதந்திரக் குழு
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எவ்வாறாயினும் பொறுப்புக்கூறும் விடயத்தைப் பிரதிபலிக்கக்கூடிய நேர்மையான அறிக்கையைக் கூடிய விரைவில் அரசாங்கம் முன்வைக்கவுள்ளது.

இந்த அறிக்கையானது ஜெனிவாவுக்குப் பதிலளிப்பதாக அல்லாது எமது அரசின் நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசின் வெளிப்படைத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே எமது சிறப்பு அறிக்கை அமையும். இதற்காக இலங்கையின் விசேட இராஜதந்திரக் குழு செயற்படும்” என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri