இன்றும் விசேட பேருந்து சேவை
பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப, இன்றும்(16) விசேட பேருந்துகள் சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கமான அட்டவணையின் கீழ் இன்றையதினம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாளை முதல் விசேட பேருந்துகள்
மேலும், பண்டிகைக் காலத்தில் தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்காக மேலதிக பேருந்துகள் நாளை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அலுவலக தொடருந்து சேவைகள் வழக்கம் போல் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளதுடன், கிராமங்களுக்குச் சென்று திரும்பும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாளை (17) முதல் பல சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
