முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் விஷேட நடைமுறை
வடக்கு, கிழக்கு பகுதிகளில் நாளைய தினம்(18.05.2026) முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, மதுபான சாலைகள் உட்பட வர்த்தக நிலையங்களை மூடி நிறைவேந்தல் நிகழ்வினை சிறப்புற நிகழ்த்துவதற்கு ஒத்தாசை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் அரைகூவல் விடுத்துள்ளனர்.
மதுபான சாலைகள் பூட்டப்படல்
மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக மதுபான சாலைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் வாயிலாகவும் கிளிநொச்சி மாவட்டத்தினர் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன், வடக்கு கிழக்கில் அனைத்து வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும். கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் வழியை சுமந்து அந்த மக்களுக்கான ஒரு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
17 ஆண்டுகள் கடந்து எமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
நினைவுக்கஞ்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று(17.5.2026) கிளிநொச்சி டிப்போ சந்தையில் சந்தியில் நடைபெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்து கொத்தாக செத்து மடிந்த நமது உறவுகளுக்கு உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
