இலங்கை தொழில் முனைவோருக்கான வாய்ப்பு- நீங்களும் விண்ணப்பிக்கலாம்!
கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாகர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இந்த வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேளனத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், எதிர்வரும் மே மாதம் 22 திகதி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தொழில் முனைவோருக்கான அங்கீகாரம்
வர்த்தகம், விவசாயம், கடற்றொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்துறை சார் வர்த்தக பொருளாதார துறையில் இருக்கும் முயற்சியாளர்களை இனங்கண்டு குறித்த விருது வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் யாழ்ப்பாணம் மட்டக்கப்பு திருகோணமலை இருந்தது. ஆனால் இந்த முறை அது சற்று விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி, இந்த முறை மன்னார் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, பெண்களின் திறமைகள் அவர்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வழிசெய்கின்றோம். உற்பத்தியாகர்கள், சுற்றுலா துறைசார் முயற்சியாளர்ககும் இதில் முக்கிய இடம் பெறுகிறார்கள்.
சிறிய நடுத்தர வர்த்தக மற்றும் முயற்சியாளர்கள் இதில் தமது கலந்துகொண்டு தமது முயற்சிகளை உலகுக்கு கொண்டுசெல்ல முடியும்.
விண்ணப்பிக்கும் கால வரையறை
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது முயற்சிகளை அடையாளப்படுத்தி விண்ணப்பங்களை இந்த மாதம் 20ஆம் திகதி முதல் ஆளுநர், மாவட்ட செயலர், பிரதேச செயலர் ஊடாக முழுமையான உறுதிப்படுத்தலுடன் எமக்கு விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் மார்ச் 31ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து தர நிலையிலும் இருக்கும் முயற்சியாளகர்களும் இணைந்து கொள்ள முடியும். கடந்த 2025 ஆம் ஆண்டு 20 முயற்சியாளர்களுக்கு விருதுகளை பெற்றிருந்த நிலையில், இந்த வருடம் 25 முதல் 30 வரையிலான முயற்சியாளர்களுக்கு விருது வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.