கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பம்:கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு
அடுத்த வருடம் முதல் செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, பாடசாலையின் முதலாம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பம்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இருந்து கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பிக்கும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 13000 பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இதற்கு பிரிட்டிஷ் கவுன்சிலும் மற்ற நிறுவனங்களும் உதவி செய்து வருவதுடன் தேவையான வேலைப் புத்தகம் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பருவத்திற்கான வேலைத்திட்டமும் அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri