சிங்கள மக்களுக்கு அஞ்சி மறைவிடங்களில் பதுங்கியுள்ள தென்னிலங்கை அமைச்சர்கள்
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமது கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆதரவாளர்களை எதிர்கொள்ள முடியாமல் கிராமத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களால் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள தமது பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களை சந்திக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் தற்போது வெளிநாடு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது வெளிநாடு சென்றால், அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விளம்பரப்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.
அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது கொழும்பில் உள்ள தமது தனிப்பட்ட இல்லங்கள் அல்லது உத்தியோகபூர்வ இல்லங்கள் இருந்து வருத்தமடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
